ரஷ்யா விமான விபத்து: 49 பேருடன் விமானம் விழுந்தது!
ரஷ்யாவில் விழுந்த An-24 விமானம் – 49 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் An-24 பயணிகள் விமானம் 49 பேருடன் விபத்துக்குள்ளானது. 5 குழந்தைகள் உட்பட யாரும் உயிர் தப்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா: இன்று, ஜூலை 24, 2025 அன்று, ஒரு ரஷ்ய An-24 பயணிகள் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பயணிகள் இருந்தனர்.
இன்று வியாழக்கிழமை, பிளாகோவேஷ்சென்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து டிண்டாவுக்காக புறப்பட்ட விமானம், அமூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விமானம், அதற்கு சென்று சேர வேண்டிய இடத்திலிருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் விழுந்ததாக ரஷ்யா மண்டல சிவில் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இவ்விபத்து நடந்தது, அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட மலைப்பாங்கான பகுதியில். எனவே, மீட்பு நடவடிக்கைகள் சவாலாக உள்ளன. TASS மற்றும் ரஷ்யா டுடே வெளியிட்ட தகவல்களின்படி, அந்த விமானம் எந்தவொரு ஆபத்து அறிகுறியும் அனுப்பவில்லை என்றும், டின்டா விமான நிலையத்தை அடைவதற்கு முன்பே தொடர்பை இழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் 6 பணியாளர்கள் மற்றும் 43 பயணிகள் இருந்ததாக பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் ஐந்து குழந்தைகளும் இருந்தனர். இந்த விபத்தினால் யாரும் உயிர் தப்பவில்லை என்பது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த An-24 விமானம், 1950களில் வடிவமைக்கப்பட்ட ஒரு பழைய மாதிரி. இந்த வகையான விமானங்கள் ரஷ்யாவில் உள்ளூர் பயணங்களுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
