மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்

0
DSP Sundaresan

டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்

மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் அதிகாரிகள் மீது பேசியதற்காக சஸ்பெண்ட். டிஐஜி விசாரணையில் போலீஸ் ஒழுங்கு மீறல் எச்சரிக்கை.

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், தமிழக அரசின் உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், எஸ்.பி அலுவலக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தரேசன், தன்னுடைய அதிகார பயண வாகனத்தை எஸ்பி அலுவலகத்தினர் பறிமுதல் செய்ததாக கூறியுள்ளார். அதன்பின், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபயணமாக பணிக்கு சென்ற அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் போலீசாரின் ஒழுங்கும் கட்டுப்பாடும் கேள்விக்குள்ளானது.

சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுந்தரேசன் தனது செயல்களால் காவல்துறையின் ஒழுங்கை பாதிப்பதை நோக்கமாகக் கொண்டதாகவும், உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி ஊடகவியலாளர்களை சந்தித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட எஸ்பியின் உத்தரவை மீறியதற்கான ஆதாரங்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, டிஐஜி தனது அறிக்கையை ஐஜிக்கு வழங்கி, சுந்தரேசனை பணிநீக்கம் செய்ய பரிந்துரை செய்ததாகவும், அதன் அடிப்படையில் தமிழக அரசு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *