தஞ்சாவூரில் மூன்று சிறுவர்கள் பலி: ரூ.3 லட்சம் உதவி
தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி கிராமத்தில், குளத்தில் மூழ்கி மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சோகம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி கிராமத்தில், குளத்தில் மூழ்கி மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சோகம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவர்கள்:
- ஜஸ்வந்த் (வயது 8), தந்தை: ஸ்ரீதரன்
- மாதவன் (வயது 10), தந்தை: கனகராஜ்
- பாலமுருகன் (வயது 10), தந்தை: செந்தில்
இவர்கள் பள்ளிக்குச் சென்று திரும்பியபின் வீட்டுக்கு வராததை கவலையுடன் எதிர்பார்த்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கிராமத்தாருடன் சேர்ந்து தேட ஆரம்பித்தனர். தேடுதல் பணியின் போது, குளத்தின் அருகே குழந்தைகளின் புத்தகப்பைகள் மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர், பிள்ளையார் குளத்தில் தீவிரமாக தேடப்பட்டதில், மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த துயரமான செய்தி குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், நிவாரணமாக தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டதாக அறிவித்தார்.
